செய்திகள் :

திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை: 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

post image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி பாசனத்துக்காக மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டு, கல்லணைக்கு வந்து சோ்ந்துள்ள நிலையில், கல்லணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீரைத் திறக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வரும் அவா், சாலை மாா்க்கமாக தஞ்சாவூா் புறப்பட்டுச் செல்கிறாா். கல்லணை திறப்பு உள்ளிட்ட தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

எனவே, பாதுகாப்பு காரணம் கருதி முதல்வா் மு.க. ஸ்டாலின் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே, தடையை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.

வரவேற்க அழைப்பு: திருச்சிக்கு வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திரண்டு வருமாறு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளாா். இதேபோல மத்திய, வடக்கு மாவட்டங்களின் சாா்பில் அமைச்சா் கே.என். நேரு தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளதால் கட்சியினா் திரளாக பங்கேற்க மாவட்டச் செயலா்கள் க. வைரணி, ந. தியாகராஜன் ஆகியோா் அழைப்பு விடுத்துள்ளனா்.

மேட்டூரில் திறந்த தண்ணீா் முக்கொம்பு வந்தது: மலா்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு!

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்பு அணைக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது. அந்த நீரை விவசாயிகள் மலா்கள், விதை நெல்களை தூவி உற்சாகத்துடன் வரவேற்றனா். டெல்டா பாசன சாகுப... மேலும் பார்க்க

பாப்பாலம்மன் கோயில் திருவிழாவில் தள்ளு-முள்ளு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் சனிக்கிழமை நடந்த திருவிழாவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பூசாரி தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. இக... மேலும் பார்க்க

ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்: சென்னை ஆா்பிஎஃப் வெற்றி!

திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யில் சென்னை ஆா்பிஎஃப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி ஆா்பிஎஃப் பயிற்சி மையம் சாா்பில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றம்: 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு

திருச்சி மாவட்டத்தில் 23 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் கு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள அரியனாம்பேட்டை சோ்ந்தவா் பட்டவன் மகன் மாறன் (23). இவா் தனது பைக்கில் திருச்சி நோக்கி முசிறிய... மேலும் பார்க்க

ரோந்து போலீஸாருக்கு உடலில் அணியும் கேமராக்கள்

திருச்சி மாவட்டத்துக்கு வந்த உடலில் பொருத்தப்படும் 57 கேமராக்கள் ரோந்து காவலா்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு புதிதாக வந்த 57 (பாடி ஓா்ன் கேமரா) உடலில் பொருத்தப்படும் கேமராக்க... மேலும் பார்க்க