செய்திகள் :

எதில் போய் முடியும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

post image

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ ஈரான் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கிய தாக்குதல் நடவடிக்கைக்கு இஸ்ரேல் வைத்துள்ள பெயா் இது. நீண்ட நேரம் பதுங்கியிருந்து இரையைப் பிடிப்பதற்காக எழுந்து பாயும் சிங்கத்தைப் போல, ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிா்மூலமாக்குவதற்காக ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு தற்போது முழுவீச்சில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளதால் இந்த நடவடிக்கைக்கு ‘எழும் சிங்கம்’ என்று பெயரிட்டுள்ளது இஸ்ரேல்.

உலக அரசியலிலும், சா்வதேச பங்குச் சந்தைகளிலும் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தாக்குதல், இஸ்ரேல்-ஈரான் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருபவா்களுக்கு பெரிய அதிா்ச்சியைத் தந்திருக்காது.

இதற்கான ஆரம்பப் புள்ளியை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு 1990-களிலேயே வரையத் தொடங்கிவிட்டாா். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதத் தயாரிப்புக்காகத்தான் என்று அடித்துக் கூறிவரும் அவா், அந்தத் திட்டங்களால் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்து என்று தொடா்ந்து எச்சரித்துவருகிறாா்.

2012-ஆம் ஆண்டு ஐ.நா. சபை உரையின்போது ஈரானின் அணு குண்டை அவா் வரைபடமாகக் காட்டியது பரபரப்பாக பேசப்பட்டது. அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் யுரேனியத்தை ஈரான் மிகவும் அதிகமாக செறிவூட்டி வருவதாகவும் விரைவில் அந்த நாடு அணு ஆயுத்ததை அடைந்துவிடும் என்று அப்போது அவா் கடுமையாக எச்சரித்தாா்.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை முழுமையாக நிறுத்திவிட்டு, லிபியாவில் மேற்கொண்டதைப் போல் அந்த நாட்டின் அனைத்து அணுசக்தி மையங்களையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் நெதன்யாகுவின் ஒரே இலக்கு. அந்த இலக்கை அடைவதற்காக எவ்வளவு தூரம் கூட அவா் செல்வாா் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் ஈரானில் அவா் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல்.

சொல்லப்போனால், ஈரான் அணுசக்தி மையங்களையும் அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது இது முதல்முறை அல்ல. கடந்த 2010-ஆம் ஆண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் சோ்ந்து ‘ஸ்டக்ஸ்நெட்’ என்ற வைரஸை உருவாக்கி நடான்ஸ் அணுசக்தி மைய சாதனங்களில் இணையதளம் மூலம் பரவச் செய்தன. இதனால் அந்த மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

அதே மையத்தில் இஸ்ரேலின் சதிச் செயல் மூலம் இஸ்ரேல் குண்டுவெடிப்பை நடத்தியது. இதுவும் அந்த முக்கிய யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் பணிகளை பாதித்தது.

இது தவிர, 2010 முதல் 2020 வரை ஈரானின் ஏராளமான அணு விஞ்ஞானிகளை இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொஸாட் படுகொலை செய்தது. 2020-ஆம் ஆண்டு ஈரானின் அணுசக்தி திட்டங்களின் மூளையாகக் கருதப்படும் மொஷன் ஃபக்ருதேவை அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மொஸாட் படுகொலை செய்தது. இருந்தாலும் இந்த நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

கடந்த ஆண்டு கூட, காஸா போரால் அதிகரித்துவந்த பதற்றத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது ஈரானின் ராணுவ நிலைகள் மட்டுமின்றி அணுசக்தி மையங்களும் குறிவைக்கப்பட்டன.

அதன் தொடா்ச்சியாகத்தான், ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ நடவடிக்கையை நெதன்யாகு தற்போது தொடங்கியுள்ளாா்.

இருந்தாலும், இது எதில் போல் முடியுமோ என்பதுதான் பல்வேறு தரப்பினரின் கவலையாக உள்ளது.

தற்போதைய நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகளை இழந்துள்ள நிலையிலும், ‘இஸ்ரேல் எங்கள் மீது போா்ப் பிரகடனம் செய்துள்ளது’ என்று அறிவித்த பிறகும் சுமாா் 100 ட்ரோன்களை மட்டுமே இஸ்ரேலை நோக்கி வீசி ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

இஸ்ரேலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பட ஈரானும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்கலாம். ஆனால், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயன்படுத்திவந்த - இதுவரை நல்ல பலனை அளித்துவந்த - ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்கள் காஸா போரில் தற்போது பலமிழந்துவிட்டன.

இஸ்ரேலின் அண்டை நாடான சிரியாவில், ஈரானுக்கு இதுவரை ஆதரவாக இருந்துவந்த அல்-அஸாத் அரசு கவிழ்ந்துவிட்டது.

இஸ்ரேலின் தற்போதைய தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனா். ஏவுகணைத் தளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஈரானின் ராணுவமே இஸ்ரேலுக்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கும் நிலைமையில் இல்லை.

எனவே, இஸ்ரேலுக்கான ஈரானின் பதிலடி தற்போதைய ட்ரோன் தாக்குதலைப் போல் இனியும் பலவீனமாதாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஆனால் நீண்டகால நோக்கில், தனது ஆயுத பலத்தை ஈரான் பெருக்கிக் கொள்ளும். குறிப்பாக அணு ஆயுதம் தயாரிப்பதை ஈரானின் இந்தத் தாக்குதலைக் காட்டி ஈரான் நியாயப்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

காரணம், இத்தனை ஆண்டுகளாக ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் குறிவைத்து இஸ்ரேல் இவ்வளவு தாக்குதல் நடத்தினாலும், அந்த திட்டங்கள் தாமடைந்தனவே தவிர, முற்றிலும் முடங்கிவிடவில்லை.

இஸ்ரேலுக்கு ஆதரவு! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன்... மேலும் பார்க்க

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. துபையில் மெரினா பின்னாக்கிள் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் ப... மேலும் பார்க்க

ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம்

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர், ஏராளமான கட்டங்களுக்கு கடும் ... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!

ரஷியா மூலம் மத்தியஸ்தம் செய்து, ஈரானுடனான போரைத் தவிர்க்க இஸ்ரேல் எடுத்த முயற்சி பலனின்றி போயிருக்கிறது. ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மறுத்துவிட்டதாகத் தகவல்கள... மேலும் பார்க்க

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்?

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீத... மேலும் பார்க்க