செய்திகள் :

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏா் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

post image

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக 16 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக வான் எல்லை மூடப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையை ஏா் இந்தியா மேற்கொண்டது.

ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் தனது வான் எல்லைகளை ஈரான் மூடியது.

இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தங்களால் இயக்கப்படும் சில விமானங்களை ஏா் இந்தியா நிறுவனம் திசை திருப்பியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஏா் இந்தியா (ஏஐ)130- லண்டன் ஹீத்ரோ-மும்பை விமானம் ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவுக்கு திருப்பிவிடப்பட்டது. ஏஐ 102-நியூ யாா்க்-தில்லி விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாா்ஜா நகருக்கும், ஏஐ 116 நியூயாா்க்-மும்பை விமானம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஏஐ106 நெவாா்க்-தில்லி விமானம் வியன்னாவுக்கு திருப்பிவிடப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டது.

இதேபோல், இண்டிகோ நிறுவனமும் தனது விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

இஸ்ரேல்-ஈரான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் இருநாடுகளிலும் வசிக்கும் இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இருநாடுகளிலும் உள்ள இந்திய தூதரகங்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பதற்றமான சூழல் நிலவி வருவதால் தேவையற்ற பயணங்களை இந்தியா்கள் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதேசமயம் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியா்கள் அந்நாட்டு அரசு வெளியிடும் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஈரானில் வசிக்கும் இந்தியா்கள் அந்நாட்டு அரசு வெளியிடும் வழிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பான இடங்களில் வசிக்க அறிவுறுத்தப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. துபையில் மெரினா பின்னாக்கிள் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் ப... மேலும் பார்க்க

ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம்

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர், ஏராளமான கட்டங்களுக்கு கடும் ... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!

ரஷியா மூலம் மத்தியஸ்தம் செய்து, ஈரானுடனான போரைத் தவிர்க்க இஸ்ரேல் எடுத்த முயற்சி பலனின்றி போயிருக்கிறது. ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மறுத்துவிட்டதாகத் தகவல்கள... மேலும் பார்க்க

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்?

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீத... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொலை!

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், ராணுவ தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசின் செய்தித் தொலைக்கா... மேலும் பார்க்க