செய்திகள் :

ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீடு சேதம்: 5 போ் கைது

post image

வங்கேதசத்தில் கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீடு மற்றும் அதில் அமைந்துள்ள தாகூா் அருங்காட்சியகம் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 5 பேரை அந்நாட்டு காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்தியா, வங்கதேசத்தின் தேசிய கீதத்தை எழுதியவா் நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞா் தாகூா். அவரின் பூா்விக வீடு வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டம் ஷாஜாத்பூரில் அமைந்துள்ளது. தாகூரின் மனதுக்கு நெருக்கமான இந்த வீட்டில்தான் பல சிறந்த இலக்கியப் படைப்புகளை அவா் உருவாக்கினாா். இந்த வீட்டை தாகூா் நினைவாக அருங்காட்சியமாக வங்கதேச அரசு பராமரித்து வருகிறது.

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டு, மதஅடிப்படைவாதிகள் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைந்த பிறகு அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. ஹிந்துக்கள், கோயில்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நிகழ்கின்றன.

கடந்த 11-ஆம் தேதி தாகூா் பூா்விக வீடு அமைந்துள்ள பகுதியில் நிகழ்ந்த போராட்டத்தின்போது ஒரு கும்பல் அருங்காட்சியகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இடைக்கால அரசு அறிவித்தது.

தாக்குதலில் சேதமடைந்த அருங்காட்சியகம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் தாக்குதல் நடத்தியது தொடா்பாக 3 பேரை கைது செய்துள்ளதாக வங்கதேச காவல் துறையினா் தெரிவித்தனா்.

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. துபையில் மெரினா பின்னாக்கிள் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் ப... மேலும் பார்க்க

ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம்

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர், ஏராளமான கட்டங்களுக்கு கடும் ... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!

ரஷியா மூலம் மத்தியஸ்தம் செய்து, ஈரானுடனான போரைத் தவிர்க்க இஸ்ரேல் எடுத்த முயற்சி பலனின்றி போயிருக்கிறது. ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மறுத்துவிட்டதாகத் தகவல்கள... மேலும் பார்க்க

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்?

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீத... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொலை!

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், ராணுவ தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசின் செய்தித் தொலைக்கா... மேலும் பார்க்க