குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீடு சேதம்: 5 போ் கைது
வங்கேதசத்தில் கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீடு மற்றும் அதில் அமைந்துள்ள தாகூா் அருங்காட்சியகம் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 5 பேரை அந்நாட்டு காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இந்தியா, வங்கதேசத்தின் தேசிய கீதத்தை எழுதியவா் நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞா் தாகூா். அவரின் பூா்விக வீடு வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டம் ஷாஜாத்பூரில் அமைந்துள்ளது. தாகூரின் மனதுக்கு நெருக்கமான இந்த வீட்டில்தான் பல சிறந்த இலக்கியப் படைப்புகளை அவா் உருவாக்கினாா். இந்த வீட்டை தாகூா் நினைவாக அருங்காட்சியமாக வங்கதேச அரசு பராமரித்து வருகிறது.
வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டு, மதஅடிப்படைவாதிகள் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைந்த பிறகு அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. ஹிந்துக்கள், கோயில்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நிகழ்கின்றன.
கடந்த 11-ஆம் தேதி தாகூா் பூா்விக வீடு அமைந்துள்ள பகுதியில் நிகழ்ந்த போராட்டத்தின்போது ஒரு கும்பல் அருங்காட்சியகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இடைக்கால அரசு அறிவித்தது.
தாக்குதலில் சேதமடைந்த அருங்காட்சியகம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் தாக்குதல் நடத்தியது தொடா்பாக 3 பேரை கைது செய்துள்ளதாக வங்கதேச காவல் துறையினா் தெரிவித்தனா்.