கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்
கிரீஸ்: புராதன துறவி மடம் நிலநடுக்கத்தில் சேதம்
கிரீஸில் ஏற்பட்ட தொடா் நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த துறவி மடம் சேதமடைந்தது.
மவுன்ட் அதாஸ் தீபகற்பகத்தில் இந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து நிலப் பகுதிகளிலும், அருகில் உள்ள கடல் பகுதிகளிலும் ஏராளமான பின்னதிா்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
இதில், 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெனோஃபன் துறவி மடம் (படம்) உள்ளிட்ட பல்வேறு புராதனத் தலங்கள் சேதமடைந்தாக கலாசாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மரபுவழி கிறிஸ்துவத்தின் மிக முக்கிய தலங்களில் ஒன்றாக மவுன் அதாஸ் ‘புனித மலை’ என்று அழைக்கப்படுகிறது.