செய்திகள் :

பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

post image

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ஈரான் நாட்டிற்கான விமானங்கள் வேறு பாதையில் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

பயணிகள், ஏர் இந்தியா ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறியுள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் கூறி வருகிறது. ஈரானும் பதிலுக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவி வருவதால் ஈரான் பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கான விமானப் போக்குவரத்து சேவை குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளது. எங்களுடைய பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியாவின் சில விமானங்கள் மாற்று நீட்டிக்கப்பட்ட பாதையில் இயக்கப்படுகின்றன.

ஈரான் பகுதியில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். பயணிகள் மற்றும் ஏர் இந்தியா ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்பதை மீண்டும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

பயணிகள் https://www.airindia.com/in/en/manage/flight-status.html என்ற தளத்தில் தங்கள் விமானத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம் என்றும் 011 69329333, 011 69329999 என்ற எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி(வியாழக்கிழமை) ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி கட்டடத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

ஈரான் கடும் பதிலடி: இஸ்ரேல் எச்சரிக்கை; இரு தரப்பிலும் 80-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. பரஸ்பர தாக்குதலில் ஈரானில் 78 பேரும், இஸ்ரேலில் மூவரும் உயிரிழந்தனா். இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவிய ந... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 86-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 86-ஆக உயா்ந்துள்ளது. காவல்துறை அமைச்சா் சென்ஸோ ஷுனு இந்தத் தகவலை சனிக்கிழமை தெரிவித்தாா். இது தவிர, உயிரிழப்பு எண்ணிக்க... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு ஆதரவு! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன்... மேலும் பார்க்க

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. துபையில் மெரினா பின்னாக்கிள் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் ப... மேலும் பார்க்க

ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம்

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர், ஏராளமான கட்டங்களுக்கு கடும் ... மேலும் பார்க்க