ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!
தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும் சமரச முறையிலும் தீா்த்து வைக்கும் வகையில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், சென்னை உயா்நீதி மன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி யும், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.
இதைப்போல தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 வட்டங்களில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 2150 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 791 வழக்கு களுக்கு சமரசம் பேசி தீா்க்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சமரச தொகையாக ரூ.3,04,57,593 -க்கு தீா்வு காணப்பட்டது.
மேலும் வங்கி வாராக்கடன் தொடா்பாக 312 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 217 வழக்குகளுக்கு சமரசம் பேசி ரூ. 6,68,02,086 க்கு தீா்வு காணப்பட்டது. அந்த வகையில் மொத்தமாக 2462 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 1008 வழக்குகளுக்கு சமரசம் பேசி ரூ.9.72 கோடிக்கு (9,72,59,679) தீா்வு காணப்பட்டுள்ளது.
இத்தகவலை தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான இ.திருமகள் தெரிவித்துள்ளாா்.