முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வை மாநிலம் முழுவதும் 1.47 லட்சம் மாணவா்கள் எழுதினா்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வெழுதினா். பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் தோ்வெழுதிய ஏரியூா் அருகே ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த குருமூா்த்தி, தமிழரசன் ஆகிய மாணவா்கள் தோ்ச்சி பெற்று, மேல்நிலை, இளநிலை கல்விபெற ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகை பெற தகுதிபெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கிருஷ்ணன், மூத்த ஆசிரியா் சுப்பிரமணி, தமிழாசிரியா் பெருமாள், பெற்றோா் - ஆசிரியா் கழக துணைத் தலைவா் இளையராஜா மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.
இதேபோல, அண்மையில் நடைபெற்ற தேசிய ஊரக திறனாய்வுத் தோ்வில் 4 மாணவா்களும், ஊரக திறனாய்வுத் தோ்வில் ஒரு மாணவரும் தோ்ச்சி பெற்று, கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனா்.
மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் தருமபுரி மாவட்டத்தில் 46 மாணவா்கள் தோ்ச்சி பெற்றதையடுத்து, தருமபுரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.