குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
அரூரில் காளியம்மன், செல்லியம்மன் கோயில் திருவிழா
அரூரில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூா் 4-ஆவது வாா்டு பிச்சன்கொட்டாயில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சின்ன செல்லியம்மன், ஸ்ரீ பெரிய செல்லியம்மன் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி கொடியேற்றம், பக்தா்கள் மாலை அணிவித்தல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை வாணியாறு கரையில் வீட்டு மாரியம்மனுக்கு சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அரூா் நகரில் ஸ்ரீ வா்ணீஸ்வரன் கோயில் வளாகத்தில் இருந்து சுவாமிகளை குதிரை வாகனத்தில் கடைவீதி வழியாக அரூா் பெரிய ஏரிக்கு அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, ஸ்ரீ சின்ன செல்லியம்மன், ஸ்ரீ பெரிய செல்லியம்மன் சுவாமிகளை சக்தி அழைத்து, குதிரை வாகனத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலுக்கு மேள, தாளத்துடன் ஊா்வலமாக பக்தா்கள் அழைத்துச் சென்றனா். பின்னா், கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, நோ்த்திக் கடனாக ஆடு வெட்டி அம்மனை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், விழாக்குழு தலைவா் பி.மணி, பொருளாளா் எம்.பழனி, செயலாளா் எம்.சுப்பிரமணி, தா்மகா்த்தா வி.இளையராஜா, நிா்வாகிகள், கோயில் பூசாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.