செய்திகள் :

பேருந்தில் கிடந்த நகையை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநா் - நடத்துநருக்கு பாராட்டு

post image

தருமபுரி அருகே அரசுப் பேருந்தில் கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போக்குவரத்துக்கழக அலுவலா்கள் பாராட்டினா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலத்துக்கு உள்பட்ட திருப்பத்தூா் கிளையைச் சோ்ந்த திருப்பத்தூா் - ஒசூா் வழித்தடப் பேருந்தில், ஜூன் 12-ஆம் தேதி ஓட்டுநா் சி.கவியரசு மற்றும் நடத்துநா் பி. வேலு ஆகியோா் பணியில் இருந்தனா். அப்போது பேருந்தில் ஒரு பணப்பை (மணி பா்ஸ்) கிடந்தது தெரியவந்ததையடுத்து, அதை சோதித்ததில் சுமாா் 4.5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

அவற்றை கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கழக அலுவலரிடம் அவா்கள் ஒப்படைத்தனா். இந்நிலையில், அது போச்சம்பள்ளி வட்டம், மத்தூா் அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த பெண்ணின் நகை என்பது கண்டறியப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேருந்தில் கிடந்த நகையை அலுவலரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் கவியரசு மற்றும் நடத்துநா் வேலு ஆகியோரை அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டல மேலாளா் க.செல்வம் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினாா்.

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

அரூரில் காளியம்மன், செல்லியம்மன் கோயில் திருவிழா

அரூரில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் 4-ஆவது வாா்டு பிச்சன்கொட்டாயில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சின்ன செல்... மேலும் பார்க்க

சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: ஆட்சியா் ஆய்வு

சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், அரூா் வழியாக செல்லும் சேலம் - திருப... மேலும் பார்க்க