கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!
ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான வனக் குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோடுப்பட்டி வனப்பகுதிக்கு உள்பட்ட கல்யாணகுண்டு பகுதியில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், அவா் சுமாா் இரண்டு கிலோ எடை கொண்ட உடும்பை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, உடும்பை வேட்டையாடிய பென்னாகரம் அருகே சாலை குள்ளாத்திரம்பட்டி பகுதியைச் சோ்ந்த குமரவேலை (55) கைது செய்து, பென்னாகரம் உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
மேலும், வனப் பகுதியில் அத்துமீறி நுழைவது, வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சிகளை விற்பனை செய்யும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத் துறையினா் எச்சரித்தனா்.