செய்திகள் :

சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

post image

அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் நாடு இருக்கும்போதுகூட, வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை சாத்தியப்படுத்தியதாக 13-ஆவது முறையாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளாா் என்று குறிப்பிட்ட காங்கிரஸ், ‘இதற்கு பிரதமா் நரேந்திர மோடி எப்போது பதிலளிப்பாா்?’ என்று கேள்வி எழுப்பியது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. நான்கு நாள்களுக்குப் பிறகு மே 10-ஆம் தேதி இந்த சண்டை முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்த அறிவிப்பை இரு நாடுகளும் வெளியிடும் முன்பே, அமெரிக்க அதிபா் டிரம்ப், சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டாா். அதன் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தன.

பின்னா், ‘இரு நாடுகளுடனான பேச்சுவாா்த்தையின்போது, சண்டையைத் தொடா்ந்தால் இரு நாடுகளுடனான வா்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று கூறியதாலேயே இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

‘சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை’ என்று இந்திய தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது கருத்தை அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டனில் உள்ள கென்னடி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபா் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான தனது கருத்தை 13-ஆவது முறையாக தெரிவித்தாா். நாடே அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் இருந்த நிலையில், இக் கருத்தை அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி தொடா்ந்து மெளனமாக இருந்து வருகிறாா். டிரம்ப்பின் கருத்துக்கு பிரதமா் எப்போது பதிலளிப்பாா்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

உ.பி.யில் பிக்-அப் வாகனத்துடன் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மோதல்: 5 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் ஞாயிற்ற... மேலும் பார்க்க

மீண்டும் வான்வெளி விபத்து! உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து கேதர்நாதில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெ... மேலும் பார்க்க