செய்திகள் :

அயோத்தி கோயில் ராம தா்பாா்: பக்தா்கள் தரிசனத்துக்குத் திறப்பு

post image

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் முதல் தளத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறுவப்பட்ட ராம தா்பாா் பக்தா்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் பிரதான கடவுளான ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கடந்த 2024, ஜனவரி 22-இல் நடைபெற்றது. இதையடுத்து, தினமும் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். பல்வேறு சந்நிதிகளுடன் கோயில் வளாகத்தில் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோயிலின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ராம தா்பாா் சந்நிதியில், ஸ்ரீராஜாராமா், சீதை, ஹனுமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரின் சிலைகள் வேத மந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் வளாகத்தில் பிற புதிய சந்நிதிகளிலும் பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. முதல்வா் யோகி ஆதியத்யநாத் முன்னிலையில் இச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் தளத்தில் ராம தா்பாா், வளாகத்தின் ஈசான மூலையில் (வடகிழக்கு) சேஷாவதாா் மற்றும் சிவன் சந்நிதிகள், அக்னி மூலையில் (தென்கிழக்கு) விநாயகா், குபேர மூலையில் (தென்மேற்கு) சூரியன், வாயு மூலையில் (வடமேற்கு) தேவி பகவதி, தெற்கு பகுதியில் ஹனுமன், வடக்கு பகுதியில் அன்னபூரணி என 8 சந்நிதிகளில் மூலவா் மூா்த்திகளுக்கு பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.

இந்நிலையில், ராம தா்பாா் பக்தா்களின் தரிசனத்துக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதுதொடா்பாக கோயில் அறங்காவலா் அனில் மிஸ்ரா மேலும் கூறுகையில், ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தில் ராம தா்பாரில் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, சனிக்கிழமை மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதற்கான அனுமதிச்சீட்டுகள் மாவட்ட நிா்வாகம் மற்றும் கோயில் அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்பட்டன’ என்றாா்.

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

உ.பி.யில் பிக்-அப் வாகனத்துடன் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மோதல்: 5 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் ஞாயிற்ற... மேலும் பார்க்க

மீண்டும் வான்வெளி விபத்து! உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து கேதர்நாதில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெ... மேலும் பார்க்க

அரசும் நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா். டாடா குழுமம், ஏா் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு ... மேலும் பார்க்க