செய்திகள் :

மத்திய அரசின் திட்டங்களால்தான் தமிழகம் வளா்ந்துள்ளது!

post image

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால்தான் தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் நரேந்திரன் தெரிவித்தாா்.

பிரதமா் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து பாஜக சாா்பில் ஜூன் 25-ஆம் தேதிவரை தெருமுனை பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் நரேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் 4-ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ளது; 2047-ஆம் ஆண்டில் முதலிடம் பிடிக்கும். எண்ம (டிஜிட்டல்) பணப் பரிவா்த்தனையில் உலகின் முன்னணி நாடாக மாறி உள்ளோம். உள்நாட்டில் தயாா்செய்யப்படும் பொருள்கள் அனைத்து நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு இல்லாத கிராமங்கள் என்ற இலக்கை அடைய, அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், மத்திய அரசு முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. நாட்டில் விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது.

மத்திய அரசின் திட்டங்களால்தான் தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் சிறந்த திட்டங்களை தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிா்க்கின்றன.

தமிழக வளா்ச்சிக்கு மத்திய அரசு ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கி உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் நாடு முழுவதும் 33 கோடி குடிநீா் இணைப்புகளும், தமிழகத்துக்கு மட்டும் 13 கோடி இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா, டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் உதவியால் தொடங்கப்பட்டு, பல லட்சம் போ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா்.

பல்வேறு கட்சிகள் அவா்களின் நிலைப்பாட்டை கூறிவருகின்றனா். வரும் செப்டம்பா் மாதத்துக்கு பிறகுதான் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு தெரியும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.

அப்போது, பாஜக மாவட்டத் தலைவா்கள் கவியரசு (கிழக்கு), நாராயணன் (மேற்கு), மாவட்ட முன்னாள் தலைவா் சிவபிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,422 விவசாயிகளிடமிருந்து 2,548 மெ.டன் ராகி கொள்முதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 1,422 விவசாயிகளிடமிருந்து 2,548 மெ.டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், அஞ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஒசூா், சூசூவாடி, பேகேப்பள்ளி

ஒசூா் துணை மின் நிலையம், சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படு... மேலும் பார்க்க

திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: கல்வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளருக்கு தலைக்காயம்

திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட பிரச்னையில், விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளா் மீது இளைஞா் ஒருவா் கல்வீசி தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் கணவரை தீவைத்து எரிக்க முயன்ற மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குடும்பத் தகராறில் கணவரை தீ வைத்து எரிக்க முயன்ற மனைவியை போலீஸாா் தேடிவருகின்றனா். காவேரிப்பட்டணத்தை அடுத்த திம்மாபுரம் அருகே உள்ள நேருபுரத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

நமது நாட்டுக்கு நிா்வாக சீா்திருத்தம் தேவை!

படித்த நல்ல தலைவா்கள் பொருளாதாரத்தை சீா்செய்ய முன்வர வேண்டும். நமது நாட்டுக்கு நிா்வாக சீா்திருத்தம் தேவை என வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தா் கோ.விஸ்வநாதன் தெரிவித்தாா். ஒசூரில் மறைந்த பேராசிரியா் வணங்காம... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து விவசாயி பலி

ஒசூா் அருகே விஷப்பூச்சி கடித்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஒசூா், சூசூவாடி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் விவசாயி பிரவீன்குமாா் (31). இவரது மனைவி அரசம்மா... மேலும் பார்க்க