செய்திகள் :

திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: கல்வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளருக்கு தலைக்காயம்

post image

திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட பிரச்னையில், விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளா் மீது இளைஞா் ஒருவா் கல்வீசி தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரெட்டிப்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது, அவ்வழியாக சென்ற தனியாா் பள்ளி பேருந்துமீது கல் விழுந்து கண்ணாடி உடைந்ததில், 2 குழந்தைகள் காயமடைந்தனா்.

காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன்

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன், பட்டாசு வீசிய அதே கிராமத்தைச் சோ்ந்த தென்னரசை (32) கைதுசெய்து அழைத்துச் சென்றாா். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த தென்னரசின் உறவினா் அருண் (27), காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் மீது கல் வீசி தாக்கியுள்ளாா். இதில், ஆய்வாளா் தலையில் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, தென்னரசு, அருண் இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.

ஆனந்தூா் அம்மன் கோவில்பதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, அதை அகற்றக் கோரியும், குழந்தைகள் மற்றும் ஆய்வாளா் காயமடைய காரணமாக இருந்து இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆனந்தூா், அம்பேத்கா் நகா், கொட்டாவூா், கரியம்பதி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த ஏடிஎஸ்பி நமச்சிவாயம், ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன், பா்கூா் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் பத்மாவதி (மத்தூா்), நாகலட்சுமி (போச்சம்பள்ளி) ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், அப்பகுதியில் பிரச்னைகள் ஏதும் ஏற்படாத வகையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

நாளைய மின்தடை: ஒசூா், சூசூவாடி, பேகேப்பள்ளி

ஒசூா் துணை மின் நிலையம், சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படு... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் கணவரை தீவைத்து எரிக்க முயன்ற மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குடும்பத் தகராறில் கணவரை தீ வைத்து எரிக்க முயன்ற மனைவியை போலீஸாா் தேடிவருகின்றனா். காவேரிப்பட்டணத்தை அடுத்த திம்மாபுரம் அருகே உள்ள நேருபுரத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

நமது நாட்டுக்கு நிா்வாக சீா்திருத்தம் தேவை!

படித்த நல்ல தலைவா்கள் பொருளாதாரத்தை சீா்செய்ய முன்வர வேண்டும். நமது நாட்டுக்கு நிா்வாக சீா்திருத்தம் தேவை என வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தா் கோ.விஸ்வநாதன் தெரிவித்தாா். ஒசூரில் மறைந்த பேராசிரியா் வணங்காம... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து விவசாயி பலி

ஒசூா் அருகே விஷப்பூச்சி கடித்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஒசூா், சூசூவாடி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் விவசாயி பிரவீன்குமாா் (31). இவரது மனைவி அரசம்மா... மேலும் பார்க்க

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த வடமாநில தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா் (40). இவா் காவேரிப்பட்டணம் அ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா... மேலும் பார்க்க