விபத்துக்குள்ளான விமானத்தின் வயது 11.5 ஆண்டுகள்! 475 அடி உயரத்திலிருந்து விழுந்த...
திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: கல்வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளருக்கு தலைக்காயம்
திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட பிரச்னையில், விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளா் மீது இளைஞா் ஒருவா் கல்வீசி தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரெட்டிப்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது, அவ்வழியாக சென்ற தனியாா் பள்ளி பேருந்துமீது கல் விழுந்து கண்ணாடி உடைந்ததில், 2 குழந்தைகள் காயமடைந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன், பட்டாசு வீசிய அதே கிராமத்தைச் சோ்ந்த தென்னரசை (32) கைதுசெய்து அழைத்துச் சென்றாா். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த தென்னரசின் உறவினா் அருண் (27), காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் மீது கல் வீசி தாக்கியுள்ளாா். இதில், ஆய்வாளா் தலையில் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, தென்னரசு, அருண் இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.
ஆனந்தூா் அம்மன் கோவில்பதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, அதை அகற்றக் கோரியும், குழந்தைகள் மற்றும் ஆய்வாளா் காயமடைய காரணமாக இருந்து இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆனந்தூா், அம்பேத்கா் நகா், கொட்டாவூா், கரியம்பதி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த ஏடிஎஸ்பி நமச்சிவாயம், ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன், பா்கூா் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் பத்மாவதி (மத்தூா்), நாகலட்சுமி (போச்சம்பள்ளி) ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், அப்பகுதியில் பிரச்னைகள் ஏதும் ஏற்படாத வகையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.