கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
காவேரிப்பட்டணம் அருகே கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த வடமாநில தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா் (40). இவா் காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டப்பட்டி பகுதியில் தங்கி, அங்குள்ள னியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுவன பணியாளா்கள் குடியிருப்பில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.