செய்திகள் :

நெல் கொள்முதல் விலை உயர்வு! - முதல்வர் அறிவிப்பு

post image

விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக சேலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இன்று(வியாழக்கிழமை) காலை தண்ணீர் திறந்துவிட்டார்.

இதன்பின்னர் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்கும் நிகழ்வில் முதல்வர் பேசியபோது விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, விவசாயிகள் இனி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,500 பெறுவார்கள் என்று நெல் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்தார்.

"சாதாரண ரக நெல், குவிண்டாலுக்கு ரூ. 2,500-க்கும் சன்னரக நெல், குவிண்டாலுக்கு 2548-க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால் 10 லட்சத்துக்கு அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்" எனத் தெரிவித்தார்.

மேலும், "திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு கூடுதல் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, 4 ஆண்டுகளுக்கு ரூ. 7,660 கோடி மதிப்பிலான திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று கூறியதுடன் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிக்க | மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வா் ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு!

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னையில் இரண்... மேலும் பார்க்க

இளைய காமராசர் என அழைக்க வேண்டாம்: விஜய்

தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக ... மேலும் பார்க்க

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க