விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ரூபானி விமான விபத்தில் சிக்கி பலியானார்.
விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி, 1206 என்ற எண்ணை தனக்கு அதிர்ஷ்ட எண்ணாகவும், தனது வாகன பதிவெண்களில் கூட அந்த எணணையே பயன்படுத்தி வந்த நிலையில், வியாழக்கிழமை அகமதாபாத்-லண்டன் விமான பயணித்தின்போது விபத்தில் சிக்கி பலியான அவரது இருக்கை எண் 12, பயணம் செய்த நேரம் பிற்பகல் 12:10 மணி. இது 12 என்ற எண்ணுடனான அவரது நம்பிக்கையை காட்டுகிறது.
இருப்பினும், அவரது 1206 என்ற அதிர்ஷ்ட எண்ணான 12.06 தேதியில் அவர் இறந்தது அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் நிகழ்ந்துள்ளது.
மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பிறந்த விஜய் ரூபானி, 1996 - 97 ராஜ்கோட் மேயராகவும், 2006 -12 வரையில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2016 - 2021 வரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார்.
பாஜகவின் மூத்தத் தலைவரான ரூபானி, குஜராத் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தவர்.