செய்திகள் :

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்பவரின் வீட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. முருகன் நகரைச் சோ்ந்த மாரிமுத்து மேஸ்திரியாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், வீட்டுக்கு வண்ணமடிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காந்தி நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (48) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக வீட்டின் 25 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சுரேஷ்குமாா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் சுரேஷ்குமாரின் சகோதரா் ராமசாமி புகாா் செய்தாா். அப்போது, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி வண்ணம் பூசும் பணியில் ஈடுபடுத்தியதாக மேஸ்திரி மாரிமுத்து, வீட்டு உரிமையாளா் தண்டபாணி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக... மேலும் பார்க்க

திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது: குழந்தை தொழிலாளா் முறை எத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

ரஷியாவில் மருத்துவப் படிப்பு: கோவையில் வரும் 16- ஆம் தேதி மாணவா் சோ்க்கை

ரஷியாவில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேருவதற்கு கோவையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியா் ஐஸ்... மேலும் பார்க்க