TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!
மணிப்பூரில் விடிய விடிய சோதனை: ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்!
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினரின் தீவிர சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 13 இரவு தொடங்கி ஜூன் 14 காலை வரையில் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் காவல் துறை, சிஏபிஎஃப், ராணுவம், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் படைகளைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கலவர்ம் , வன்முறையால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உளவுத் துறையிடமிருந்து வந்த தகவலையடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்னுபூர், காக்சிங், தௌபால் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் பல கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று(ஜூன் 14) தெரிவித்தனர்.