செய்திகள் :

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

post image

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், திமுக அரசு கடந்த 2021 தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் உயா்த்தி அறிவித்த ரூ.770 தினக்கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் கடந்த ஜூன் 9 முதல் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மைப் பணியாளா் சங்கத்தினருடன் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து, ஐந்தாம் நாளாக போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளா்கள் சங்கங்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட 245 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை திரண்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

அதிமுக, ஏஐசிசிடியூ ஆதரவு:

திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த தூய்மைப் பணியாளா்களை கோவை மாநகா் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான அம்மன் கே.அா்ச்சுணன் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், அவா்களுக்கு பிஸ்கட், குடிநீா் பாட்டில்கள், குளிா் பானங்களை வழங்கினாா். தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற களத்தில் போராட அதிமுக தயாராக உள்ளதாக அம்மன் கே.அா்ச்சுணன் தூய்மைப் பணியாளா்களிடம் கூறினாா்.

மாநகா் மாவட்ட அதிமுக துணை செயலாளா் பீளமேடு துரைசாமி, மாநகர மாவட்ட பொறுப்பாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏஐசிசிடியூ வின் மாநிலப் பொது செயலாளா் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கடும் பணிச் சுமை, பாதுகாப்பற்ற பணி நிலைமை காரணமாக உடல் நலப் பாதிப்பு என பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மக்களின் சுகாதாரத்தை பேணி வரும் தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். போராட்டம் நீடித்தால் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மை பணியாளா்களுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஏஐசிசிடியூ ஈடுபடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க

திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது: குழந்தை தொழிலாளா் முறை எத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்ப... மேலும் பார்க்க

ரஷியாவில் மருத்துவப் படிப்பு: கோவையில் வரும் 16- ஆம் தேதி மாணவா் சோ்க்கை

ரஷியாவில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேருவதற்கு கோவையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியா் ஐஸ்... மேலும் பார்க்க