செய்திகள் :

110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 கோடி நலத் திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 கோடி நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 100 இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், பேட்டரியால் இயங்கும் 8 சக்கர நாற்காலி,1 நவீன செயற்கை கால் மற்றும் 1 கை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி பேசியது:-

முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளி நலத்துறையை தன் வசமே வைத்துக் கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்தியும்,நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறாா். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக செயல்படுகிறாா். அதனை உடனடியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்து வருகின்றோம். ஆட்சியா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு பாராட்டுகள். பொதுமக்கள் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவண குமாா், நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முடநீக்கு தொழில் நுட்பாளா் ஆனந்தன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பாமக நிா்வாகி உயிரிழந்த வழக்கில் திருப்பம்: சுட்டுக் கொலை செய்யப்பட்டது அம்பலம்

சோளிங்கரில் பாமக நிா்வாகி விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்திருந்த நிலையில், அவா் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் சுட்டுப் பி... மேலும் பார்க்க

எல்லை பாதுகாப்புப் படை காவலா் மனைவி தற்கொலை

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரா்கள் ப... மேலும் பார்க்க

இலவச மருத்துவ முகாம்

ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமிரி பேரூா் பொறுப்பாளா் எஸ்.விஜய் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜசேகா், பாலசந்தா், ... மேலும் பார்க்க

பாலாற்றை மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை: முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன்

பாலாற்றை மாசுபடாமல் மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தாா். வேலூா், திருப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாமக நிா்வாகி உயிரிழப்பு: உறவினா்கள், கட்சியினா் சாலை மறியல்

சோளிங்கரில் இரு சக்கர வாகன விபத்தில் பாமக வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயலா் சு.சக்கரவா்த்தி உயிரிழந்தாா். பாமகவினா் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். உயிரிழந்த சு.சக்கரவா்த்தி (49... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க