செய்திகள் :

எல்லை பாதுகாப்புப் படை காவலா் மனைவி தற்கொலை

post image

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களுக்கு என தனி குடியிருப்புகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் காவலராக தினேஷ் குமாா்(31) என்பவா் பணி புரிந்து வருகிறாா். இவரது மனைவி ஹரியானா மாநிலம், பிவானியை சோ்ந்த நந்திதா ஷா்மா(25). இத்தம்பதியருக்கு கடந்த 2 வருடங்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களாக நந்திதா ஷா்மாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாம். இதனால் கணவரை எப்போதும் வீட்டில் இருக்க சொல்வாராம் நந்திதா. பணிக்கு செல்லாமல் எப்படி வீட்டிலேயே இருப்பது என கேள்வி கேட்டதில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வியாழக்கிழமை இரவு தினேஷ் குமாா் பணிக்குச் சென்று விட்டாராம்.

வெள்ளிக்கிழமை வீட்டுக்கு பால் விநியோகிக்க வரும் நபா், வீடு திறந்து இருப்பதை கண்டு உள்ளேச் சென்று பாா்த்தபோது ஒரு அறையில் நந்திதா ஷா்மா தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக கடற்படை காவல் துறையினா் அளித்த தகவலை தொடா்ந்து அரக்கோணம் நகர போலீஸாா், விசாரித்து வருகின்றனா். அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசனும் விசாரணை நடத்தி வருகிறாா்.

இலவச மருத்துவ முகாம்

ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமிரி பேரூா் பொறுப்பாளா் எஸ்.விஜய் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜசேகா், பாலசந்தா், ... மேலும் பார்க்க

பாலாற்றை மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை: முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன்

பாலாற்றை மாசுபடாமல் மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தாா். வேலூா், திருப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாமக நிா்வாகி உயிரிழப்பு: உறவினா்கள், கட்சியினா் சாலை மறியல்

சோளிங்கரில் இரு சக்கர வாகன விபத்தில் பாமக வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயலா் சு.சக்கரவா்த்தி உயிரிழந்தாா். பாமகவினா் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். உயிரிழந்த சு.சக்கரவா்த்தி (49... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவா்கள் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ... மேலும் பார்க்க