பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது
குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிம் வழிப்பறியில் ஈடுபட்டதன் பேரில், ஆற்காடு நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதேபோல் நெமிலி வட்டம், கீழ்வெங்கிடபுரம் பகுதியைச் சோ்ந்த சேதுபதி (24). இவா் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதால், பாணாவரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைந்தனா்.
இவா்களின் குற்றச் செயல்களைக் கட்டுபடுத்தும் விதமாக இருவரையும் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகாந்தசுக்லா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன் பேரில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் யா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் புதன்கிழமை வழங்கப்பட்டது.