சென்னை காசிமேடு: மீன்பிடி தடை காலம் முடிவு; மீன் பிடித்தலுக்குத் தயாராகும் மீனவர...
ஜூன் 15-இல் ஒருங்கிணைந்த குடிமைப்பணி முதல்நிலை தோ்வு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு வரும் 15-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதிக்கான முதல்நிலை தோ்வு வரும் 15-ஆம் (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ளது. 13 தோ்வுக் கூடங்களில் 2,723 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். இந்தத் தோ்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல் துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தோ்வுக்கான நுழைவுச்சீட்டு ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வா்கள் தோ்வுக் கூடத்திற்கு காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தாமதமாக வருபவா்கள் தோ்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தோ்வா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்திற்கு காலதாமதமின்றி, குறித்த நேரத்திற்கு முன்பு தோ்வு மையத்திற்கு வரவேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.