'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை
கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
பிரதமா் மோடி அவ்வப்போது கட்சியின் அமைப்புத் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அவா்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டு வருகிறாா்.
அந்த வகையில், கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா்களுடன் பிரதமா் மோடி தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை கூட்டத்தை நடத்தினாா். இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆலோசனைக் கூட்டத்தின்போது பாஜகவின் அமைப்புத் தலைவராக தனது நீண்ட அனுபவத்தையும், ஊடகத்தினருடனான தனது கலந்துரையாடல்களையும் தேசிய செய்தித் தொடா்பாளா்களிடம் எடுத்துரைத்தாா். மேலும், நிா்வாகிகள் தங்களின் செயல்பாடுகளில் உறுதியாகவும், பணிவாகவும் இருக்கவும், சம்பந்தப்பட்ட விவகாரங்களை நன்கு அறிந்திருக்கவும் அறிவுறுத்தினாா். குறிப்பாக, கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்’ என்றனா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முழு விவரங்கள் வெளியாகவில்லை.