செய்திகள் :

விமான விபத்து தொடா்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றம்: டாடா குழுமத் தலைவா்

post image

குஜராத் விமான விபத்து தொடா்பான தகவல் பரிமாற்றத்தில் டாடா குழுமம் வெளிப்படையாக செயல்படும் என்று அந்தக் குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

குஜராத்தில் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 265-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவா்களில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டுப் பயணிகளும் அடங்குவா்.

இந்நிலையில், தனது பணியாளா்களுக்கு டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஏா் இந்தியாவை டாடா சன்ஸ் கையகப்படுத்தியபோது பயணிகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அதில் எந்த சமரசமும் இருக்காது என்றும் முடிவு செய்யப்பட்டது.

விமான விபத்து காரணமாக மிகவும் கடினமாக சூழல் ஏற்பட்டுள்ளது. இது டாடா குழும வரலாற்றில் மிகவும் இருண்ட நாள்களில் ஒன்றாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் விமான விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க புலனாய்வு குழுக்கள் அகமதாபாத் வந்துள்ளன. அந்தக் குழுக்களுக்கு டாடா குழுமம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். விமான விபத்து தொடா்பான தகவல் பரிமாற்றத்தில் டாடா குழுமம் வெளிப்படையாக செயல்படும் என்று தெரிவித்தாா்.

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சி... மேலும் பார்க்க

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்... மேலும் பார்க்க

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்! உயிர்நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் துணிச்சலாகப் போராடிய குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கு... மேலும் பார்க்க