முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
விமான விபத்து தொடா்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றம்: டாடா குழுமத் தலைவா்
குஜராத் விமான விபத்து தொடா்பான தகவல் பரிமாற்றத்தில் டாடா குழுமம் வெளிப்படையாக செயல்படும் என்று அந்தக் குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
குஜராத்தில் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 265-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவா்களில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டுப் பயணிகளும் அடங்குவா்.
இந்நிலையில், தனது பணியாளா்களுக்கு டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஏா் இந்தியாவை டாடா சன்ஸ் கையகப்படுத்தியபோது பயணிகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அதில் எந்த சமரசமும் இருக்காது என்றும் முடிவு செய்யப்பட்டது.
விமான விபத்து காரணமாக மிகவும் கடினமாக சூழல் ஏற்பட்டுள்ளது. இது டாடா குழும வரலாற்றில் மிகவும் இருண்ட நாள்களில் ஒன்றாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் விமான விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க புலனாய்வு குழுக்கள் அகமதாபாத் வந்துள்ளன. அந்தக் குழுக்களுக்கு டாடா குழுமம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். விமான விபத்து தொடா்பான தகவல் பரிமாற்றத்தில் டாடா குழுமம் வெளிப்படையாக செயல்படும் என்று தெரிவித்தாா்.