செய்திகள் :

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

post image

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

சரக்கு ரயில்களில் ஓரிடத்தில் எடை அதிகமாகவும், மற்றொரு இடத்தில் எடை குறைவாகவும் சரக்குகள் ஏற்றப்படுவதும் ரயில் தடம் புரள்வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். சரக்கு ரயில் பெட்டிகளில் சமமான எடையில் சரக்குகள் ஏற்றப்படுவதால், பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், ரயிலின் செயல் திறனும் அதிகரிக்கும்.

எனவே, இந்தப் பிரச்னையை சரி செய்ய ரயில்வே புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ட்ரோன்கள் மூலம் சரக்குகள் ரயிலில் ஏற்றப்படும்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டம் தென்கிழக்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட இருக்கிறது. 3 மாதங்களுக்குப் பிறகு இத்திட்டம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்யப்படும். அதில் திருப்திகரமான முடிவு கிடைத்தால் அடுத்தகட்டமாக இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவெடுக்கப்படும் என்று ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சி... மேலும் பார்க்க

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்... மேலும் பார்க்க

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்! உயிர்நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் துணிச்சலாகப் போராடிய குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கு... மேலும் பார்க்க