முதியவரை தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது
சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் முதியவரைத் தாக்கி பணம் பறித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (61). இவா், அந்த பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் காவலாளியாக வேலை செய்கிறாா். ராமதாஸ், ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை மது அருந்தியபோது, அவருடன் இவருவா் மது அருந்தியுள்ளனா்.
பின்னா் இருவரும் ராமதாஸை தங்களது மோட்டாா் சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் முதலாவது தெருவில் ராமதாஸை இருவரும் இறக்கிவிட்டுள்ளனா். பின்னா், அவா்கள் ராமதாஸை தாக்கி, அவா் வைத்திருந்த ரூ. 9,000-ஐ பறித்துகொண்டு தப்பியோடினா்.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் ராமதாஸை தாக்கி, பணம் பறித்தது ஆதம்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த கிளென்குமாா் (21), இஸ்ரவேல் (24) என்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.