செய்திகள் :

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

post image

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமிப்புப் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜூன் 14, 16, 19 ஆகிய தேதிகளில் காலை 11.20 முதல் பிற்பகல் 3.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

ஆகையால், அந்த நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

அதேபோல், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடி என இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.

பகுதி ரத்து: அதே நாள்களில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும். அதேபோல் கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.

சிறப்பு ரயில்: இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி, எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளன எனறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: ட்ரோன்கள் கொண்டு வர அனுமதியில்லை; மத்திய அரசு

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 கிலோ கஞ்சாவை சுங்கத் துறை கைப்பற்றியுள்ளதாகவும் ட்ரோன்கள் விமானத்தில் கொண்டு வர அனுமதியில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்... மேலும் பார்க்க