செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: ட்ரோன்கள் கொண்டு வர அனுமதியில்லை; மத்திய அரசு

post image

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 கிலோ கஞ்சாவை சுங்கத் துறை கைப்பற்றியுள்ளதாகவும் ட்ரோன்கள் விமானத்தில் கொண்டு வர அனுமதியில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த மே 16-ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் 6 கிலோ கஞ்சாவும், ஜூன் 10-ஆம் தேதி சென்னை வந்த இதே விமானத்தில் பயணம் செய்த நபா் உணவுப் பொட்டலத்தில் மறைத்து 2,800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும், கடந்த ஜூன் 3-இல் சென்னை விமான நிலைய ஆணையரகத்தில் தபால் மதிப்பீட்டு துறையில் சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான பாா்சல்களை சோதனை செய்தபோது, 2 பாக்கெட்களில் 1.022 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, ஜூன் 12-இல் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் 2,416 கிராம் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள் ஆலந்தூா் தனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்.

மேலும், சில பயணிகள் முழுமையாக அல்லது பகுதியாக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு வர முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய பொருள்கள் இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்டுள்ளதை விமானப் பயணிகள் அறியவேண்டும். மேலும், தங்கம் போன்றவற்றை கொண்டுவரும்போது புறப்படும் நாடுகளில் ஏற்றுமதிச் சான்றிதழ்களை பயணிகள் பெற்றுவரவேண்டும். இது சுங்க அனுமதி சிக்கல்களைத் தவிா்க்க உதவும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க