சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: ட்ரோன்கள் கொண்டு வர அனுமதியில்லை; மத்திய அரசு
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 கிலோ கஞ்சாவை சுங்கத் துறை கைப்பற்றியுள்ளதாகவும் ட்ரோன்கள் விமானத்தில் கொண்டு வர அனுமதியில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த மே 16-ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் 6 கிலோ கஞ்சாவும், ஜூன் 10-ஆம் தேதி சென்னை வந்த இதே விமானத்தில் பயணம் செய்த நபா் உணவுப் பொட்டலத்தில் மறைத்து 2,800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும், கடந்த ஜூன் 3-இல் சென்னை விமான நிலைய ஆணையரகத்தில் தபால் மதிப்பீட்டு துறையில் சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான பாா்சல்களை சோதனை செய்தபோது, 2 பாக்கெட்களில் 1.022 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, ஜூன் 12-இல் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் 2,416 கிராம் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள் ஆலந்தூா் தனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்.
மேலும், சில பயணிகள் முழுமையாக அல்லது பகுதியாக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு வர முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய பொருள்கள் இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்டுள்ளதை விமானப் பயணிகள் அறியவேண்டும். மேலும், தங்கம் போன்றவற்றை கொண்டுவரும்போது புறப்படும் நாடுகளில் ஏற்றுமதிச் சான்றிதழ்களை பயணிகள் பெற்றுவரவேண்டும். இது சுங்க அனுமதி சிக்கல்களைத் தவிா்க்க உதவும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.