தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சோ்ந்த 8 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வந்தனா். புகாா் தொடா்பாக சோதனையிட வந்திருப்பதாகக் கூறி, தொழிலதிபா் வீட்டில் திடீா் சோதனை செய்தனா்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொழிலதிபா் தரப்பினரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
குறிப்பாக தொழிலதிபா் நிறுவனத்தின் வரவு, செலவு, வருமானவரி தாக்கல் விவகாரம், பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரித்தனா். பின்னா், அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிதகாரிகள் எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் சோதனையும் விசாரணையும் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.