செய்திகள் :

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

post image

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதே கோரிக்கையை முன்வைத்து மனுதாரா் பிகாஷ் சஹா பலமுறை மனு தாக்கல் செய்ததையடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிா்க்குமாறும், இல்லையெனில் அபராதம் விதித்துவிடுவதாகவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்குவதை திரும்பப் பெறக் கோரி பிகாஷ் சஹா கடந்த 2023, பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பான தெளிவான விளக்கம்கோரி உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனுவை பிகாஷ் சஹா தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஒரே விவகாரம் தொடா்பாக மீண்டும் மீண்டும் மனுக்களை தாக்கல் செய்து மனுதாரா் நீதிமன்ற நடைமுறைகளைச் சீா்குலைக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது. இது மிகத் தீவிரமான பிரச்னையாகும். அரசியல்வாதி அல்லது தொழிலதிபா் என முக்கிய நபா்கள் யாராக இருந்தாலும் அவா்களது பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

எனவே, யாருக்கு எந்த வகையிலான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகளே முடிவு செய்யும். இதில் நீதிமன்றம் தலையிடாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், வருங்காலங்களில் மீண்டும் இதுபோன்ற மனுக்களை பிகாஷ் சஹா தாக்கல் செய்தால் அவருக்கு அபராதம் விதித்துவிடுவதாகவும் நீதிபதிகள் அமா்வு எச்சரித்தது.

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க

கேரளத்தில் மீண்டும் மழை-வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. கடல் கொந்தளிப்பால், கடலோர கிராமங்களில் த... மேலும் பார்க்க