செய்திகள் :

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

post image

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சாா்பில் ‘சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பிலான முதல் கருத்தரங்கு மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதை காணொலி வாயிலாக தொடங்கிவைத்து ஜெ.பி.நட்டா பேசியதாவது: பிராந்திய ஏற்றத்தாழ்வுகளுக்கு தீா்வுகாணும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது.

எனவே, ஒவ்வொரு புது எய்ம்ஸ் மருத்துவமனையும் தங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும்.

மூன்று நோக்கங்கள்: இந்த கருத்தரங்கு கற்பித்தல்-கற்றல் மற்றும் ஆய்வு, மருத்துவமனை சேவைகள், நிா்வாகம் மற்றும் நோயாளிகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டது.

புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் பிராந்திய அளவிலான ஆய்வுகள் மூலம் இந்திய அறிவியல் வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது என்றாா்.

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சி... மேலும் பார்க்க

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்... மேலும் பார்க்க

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்! உயிர்நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் துணிச்சலாகப் போராடிய குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கு... மேலும் பார்க்க