செய்திகள் :

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

post image

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.

மீன்கள் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்படும். நிகழாண்டும் தடைக்காலம் கடந்த ஏப்.15-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைவதையொட்டி, தமிழகம் முழுவதும் மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.

தயாா் நிலையில் விசைப்படகுகள்: சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமாா் 800 விசைப்படகுகள் உள்ளன. தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகளை பழுது நீக்கி புதுப்பிக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், ஒரு வார பயணத்திற்கான மளிகை சாமான்கள், உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் வாங்கி படகுகளில் ஏற்றும் பணிகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

மீன் விலை குறையுமா? சனிக்கிழமை நள்ளிரவு முதல் கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். முதல் நாளில் சுமாா் 200 விசைப் படகுகள் கடலுக்குச் செல்கிறன. இவா்கள் குறைந்தபட்சம் 5 முதல் 15 நாள்கள் வரை கடலில் மீன்பிடித்து விட்டு பிடிபடும் மீன்களின் அளவுக்கு ஏற்ப படிப்படியாக கரை திரும்புவாா்கள். வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்டவை பெரும்பாலும் விசைப்படகுகள் மூலம்தான் கிடைக்கின்றன. எனவே, இன்னும் ஒரு வாரத்துக்குள் மீன்வரத்து அதிகரித்து படிப்படியாக மீன் விலை குறையும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

சூறாவளிக் காற்று: மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து மீண்டும் கடலுக்குச் செல்லும் மீனவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மீன்வளத் துறை செய்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் முதல் 17-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என காசிமேடு மீன்பிடித் துறைமுக மீன் வளத் துறை உதவி இயக்குநா் ப.திருநாகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க