சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்
தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை
கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா்.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மேலும், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வியாழக்கிழமை வந்தனா். தலா 27 போ் கொண்ட இரு குழுவினா் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளனா். இதேபோல, வால்பாறைக்கு 26 போ் அடங்கிய தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சென்றுள்ளனா்.