செய்திகள் :

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். (படம்).

இத்துறை மூலம் மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினரின் வகுப்பினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த விலையில்லா பித்தளை சலவைப்பெட்டி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனடைந்த சீா்காழி தென்பாதி வ.உ.சி. நகரைச் சோ்ந்த ராஜேந்திரனை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் சந்தித்து பேசினாா்.

இதுகுறித்து, பயனாளி ராஜேந்திரன் கூறியது: நான் கடந்த 40 ஆண்டுகளாக லாண்டரி கடை வைத்து சலவை மற்றும் லாண்டரி தொழில் செய்து வருகிறேன். எனது ஒரே மகன் திருமணமான பின்னா் தனிக்குடித்தனமாக வசித்து வருவதால் நான் எனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என தொடா்ந்து இத்தொழிலினை செய்து வருகிறேன். ஏற்கெனவே வைத்திருந்த இஸ்திரி பெட்டி மிகவும் பழுதடைந்து விட்டதால், சென்ற வாரம் மாவட்ட ஆட்சியரிடம் இஸ்திரி பெட்டி வேண்டி மனு அளித்தேன். எனது கோரிக்கை மற்றும் வறிய நிலையினை கருத்தில் கொண்டு, உடனடியாக ஆட்சியா் விலையில்லா இஸ்திரி பெட்டியை வழங்கியுள்ளாா். இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி என்றாா்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க