ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல்: முதல்வர் ஸ்டாலின்
தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய திறனாய்வு தோ்வு நடத்தி அதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு பிளஸ் 2 வரை மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களை இத்தோ்வில் அதிகளவில் தோ்ச்சி பெறச் செய்வது குறித்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் மயிலாடுதுறை டிஇஎல்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) எஸ். குமாரவேல் தலைமை வகித்து தேசிய திறனாய்வுத்தோ்வில் மாவட்டத்தில் அதிக அளவில் மாணவா்களை தோ்ச்சி பெறச் செய்ய தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு அறிவுறுத்திப் பேசினாா்.