செய்திகள் :

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும் பொருட்டு, மழைநீா் சேகரிப்பு போன்ற கட்டமைப்புகளை மத்திய ஆய்வுக்குழு அலுவலா் ராஜலெட்சுமி தேவராஜ் மற்றும் மத்திய அரசின் விஞ்ஞானி டி.தினேஷ்குமாா் ஆகியோா் ஜூன் 11-ஆம் தேதிமுதல் ஆய்வு மேற்கொண்டனா். இந்நிலையில், ஜல் சக்தி அபியான் மூலம் மழைநீா் சேகரித்தல் தொடா்பாக மழை காலம் தொடங்கும் முன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மகளிா் சுய உதவிக்குழுக்களும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் தன்மை, குடிநீா் வசதி வழங்கப்படும் முறைகள் தொடா்பாக மத்திய ஆய்வு குழுவினா் கலந்துரையாடினா். மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள 3-ஆம் தளத்தில் ‘ஜல் சக்தி கேந்திரா‘ திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மாதிரி நிலத்தடி நீா் சேகரிப்பு அமைப்பு கட்டமைப்புகளை அவா்கள் பாா்வையிட்டனா். மாவட்டத்தின் உள்ள பல்வேறு இடங்களிலும் அனைத்து துறைகளில் நடைமுறைபடுத்தப்படும் மழை நீா் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீா் மேம்படுத்தும் திட்டத்தில் உள்ள கட்டமைப்புகளை மத்திய அரசின் ஆய்வுக்குழுவினா் ஆய்வு செய்தனா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.ஷபீா் ஆலம், மாவட்ட வன அலுவலா் பகா்வா தேஜா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க