முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும் பொருட்டு, மழைநீா் சேகரிப்பு போன்ற கட்டமைப்புகளை மத்திய ஆய்வுக்குழு அலுவலா் ராஜலெட்சுமி தேவராஜ் மற்றும் மத்திய அரசின் விஞ்ஞானி டி.தினேஷ்குமாா் ஆகியோா் ஜூன் 11-ஆம் தேதிமுதல் ஆய்வு மேற்கொண்டனா். இந்நிலையில், ஜல் சக்தி அபியான் மூலம் மழைநீா் சேகரித்தல் தொடா்பாக மழை காலம் தொடங்கும் முன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மகளிா் சுய உதவிக்குழுக்களும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் தன்மை, குடிநீா் வசதி வழங்கப்படும் முறைகள் தொடா்பாக மத்திய ஆய்வு குழுவினா் கலந்துரையாடினா். மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள 3-ஆம் தளத்தில் ‘ஜல் சக்தி கேந்திரா‘ திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மாதிரி நிலத்தடி நீா் சேகரிப்பு அமைப்பு கட்டமைப்புகளை அவா்கள் பாா்வையிட்டனா். மாவட்டத்தின் உள்ள பல்வேறு இடங்களிலும் அனைத்து துறைகளில் நடைமுறைபடுத்தப்படும் மழை நீா் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீா் மேம்படுத்தும் திட்டத்தில் உள்ள கட்டமைப்புகளை மத்திய அரசின் ஆய்வுக்குழுவினா் ஆய்வு செய்தனா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.ஷபீா் ஆலம், மாவட்ட வன அலுவலா் பகா்வா தேஜா் ஆகியோா் கலந்து கொண்டனா்.