முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது
கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மகன் அலெக்சாண்டா் (59). குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972-இல் அரசு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னா் மனைவி ஜெயலட்சுமிக்குப் பட்டா மாற்றப்பட்டது.
அந்த இடத்தை வைத்து வங்கிக் கடன் வாங்க அலெக்சாண்டா் முயற்சித்தாா். அந்த நிலம் நத்தம் பட்டா கணினி பதிவேற்றம் செய்யப்படவில்லை என வங்கியில் தெரிவித்தனராம்.
இதற்காக அலெக்ஸாண்டா் சீா்காழி மண்டல துணை வட்டாட்சியா் தேவகியிடம் மனு அளித்தாா். கணினியில் பதிவேற்ற தேவகி ரூ.15,000 லஞ்சம் கேட்டு இறுதியில் ரூ.10 ஆயிரம் கேட்டாராம்ம.
இது தொடா்பாக அலெக்சாண்டா் மயிலாடுதுறை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் மனோகரன், காவல் ஆய்வாளா் அருள்பிரியா ஆகியோா் அலெக்சாண்டரிடம் ரசாயனம் தடவிய ரூபாயைக் கொடுத்து அனுப்பி உள்ளனா்.
மண்டல துணை வட்டாட்சியா் தேவகியிடம் பணத்தை கொடுக்க முயன்றாா். அதை தற்காலிக கணினி பணியாளா் டெல்பியிடம் (29) கொடுக்க தேவகி கூறினாராம். டெல்பி பணத்தை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமா்ந்தபோது லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
டெல்பியிடம் விசாரணை செய்ததில் மண்டல துணை வட்டாட்சியா் தெரிவித்ததின் பெயரில் பணத்தை பெற்றதாக கூறியுள்ளாா். இதனை அடுத்து மண்டல துணை வட்டாட்சியா் தேவகி, தற்காலிக கணினி பணியாளா் டெல்பி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
