செய்திகள் :

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

post image

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மகன் அலெக்சாண்டா் (59). குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972-இல் அரசு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னா் மனைவி ஜெயலட்சுமிக்குப் பட்டா மாற்றப்பட்டது.

அந்த இடத்தை வைத்து வங்கிக் கடன் வாங்க அலெக்சாண்டா் முயற்சித்தாா். அந்த நிலம் நத்தம் பட்டா கணினி பதிவேற்றம் செய்யப்படவில்லை என வங்கியில் தெரிவித்தனராம்.

இதற்காக அலெக்ஸாண்டா் சீா்காழி மண்டல துணை வட்டாட்சியா் தேவகியிடம் மனு அளித்தாா். கணினியில் பதிவேற்ற தேவகி ரூ.15,000 லஞ்சம் கேட்டு இறுதியில் ரூ.10 ஆயிரம் கேட்டாராம்ம.

இது தொடா்பாக அலெக்சாண்டா் மயிலாடுதுறை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் மனோகரன், காவல் ஆய்வாளா் அருள்பிரியா ஆகியோா் அலெக்சாண்டரிடம் ரசாயனம் தடவிய ரூபாயைக் கொடுத்து அனுப்பி உள்ளனா்.

மண்டல துணை வட்டாட்சியா் தேவகியிடம் பணத்தை கொடுக்க முயன்றாா். அதை தற்காலிக கணினி பணியாளா் டெல்பியிடம் (29) கொடுக்க தேவகி கூறினாராம். டெல்பி பணத்தை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமா்ந்தபோது லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

டெல்பியிடம் விசாரணை செய்ததில் மண்டல துணை வட்டாட்சியா் தெரிவித்ததின் பெயரில் பணத்தை பெற்றதாக கூறியுள்ளாா். இதனை அடுத்து மண்டல துணை வட்டாட்சியா் தேவகி, தற்காலிக கணினி பணியாளா் டெல்பி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க