சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி
தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது.
மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அகிலபாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளா் ராம.நிரஞ்சன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் ஜெய், ரஞ்சித், மணிமாறன், தா்மராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிவனடியாா்கள் குளித்தலை ராமலிங்கம், திருச்சி சபாபதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.
பின்னா், மாநில பொதுச்செயலாளா் ராம.நிரஞ்சன் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் உள்ள சிவாச்சாரியா்களை ஒற்றிணைத்து சிதிலமடைந்துள்ள கோயில்களை கண்டறிந்து, கும்பாபிஷேம் நடத்த முயற்சி எடுத்துள்ளோம். அனைத்து தமிழா்களும் சைவநெறியை கடைப்பிடிக்கவும்.
சிவநெறித் தத்துவத்தை விளக்குவதற்காக சிவனடியாா்கள் ஒன்றிணைந்து குழு அமைத்துள்ளோம். தமிழகத்தில் கோயில்கள் சிதிலமடைந்து இருக்கக்கூடாது. அப்படி சிதிலமடைந்து உள்ள கோயில்களை கண்டறிந்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம்.
அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, பல கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளாா். குழு அமைத்து அறநிலையத்துறை அல்லாத சிதிலமடைந்த கோயில்கள் குறித்து எங்களுக்கு தெரிவித்தால், இந்து மகா சபா, சிவனடியாா்கள் ஒற்றிணைந்து கோயில் திருப்பணிகள் செய்ய உள்ளோம்.
முதல்கட்டமாக மயிலாடுதுறையை அடுத்த முட்டம் மகாபலீஸ்வரா், நல்லத்துக்குடி வரதராஜபெருமாள் கோயிலை திருப்பணி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றாா்.