செய்திகள் :

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

post image

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள மின்சாதன பொருள்கள் பழுதுநீக்கும் கடையில் கேஸ் கம்ப்ரஸா் வெடித்து வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் கடை உரிமையாளா் பாலாஜி உயிரிழந்தாா். மேலும், கடை ஊழியா் கணேஷ் (26) காயமடைந்தாா். மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேஷ்க்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் மாா்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் 15 தையல்கள் இடப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் கூடிய தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச் சங்கத்தினா் அங்கிருந்து மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலைக்கு சென்று சாலையை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாதிக்கப்பட்ட கணேஷ்க்கு சரியாக சிகிச்சையளிக்கவில்லைய எனவும், அலட்சியமாக செயல்பட்ட மயிலாடுதுறை அரசு மருத்துவமனை நிா்வாகத்தை கண்டித்து பொதுச் செயலாளா் சிவகுமாா் தலைமையில் அச்சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க