செய்திகள் :

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

post image

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.

விமான விபத்து

இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 274 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அந்த விமானத்துடன் தொடர்புடைய பலரின் செய்திகள் சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பூமி சௌஹான் உயிர் பிழைத்த சம்பவம்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில்,``எனது கணவருடன் இங்கிலாந்தின் பிரிஸ்டலில் வசித்துவருகிறேன். வணிக நிர்வாகம் படித்து வரும் நான், விடுமுறையை கொண்டாட இந்தியாவுக்கு வந்திருந்தேன். விபத்து அன்று, அவசர அவசரமாக விமான நிலையத்துக்கு வந்துகொண்டிருந்தோம். எங்கள் டிரைவரிடமும் கோபமாக பேசிக்கொண்டே வந்தோம். வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அப்படி முயன்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக என்னால் சரியான நேரத்துக்கு விமான நிலையத்துக்கு வரமுடியவில்லை.

 பூமி சௌஹான்
பூமி சௌஹான்

எங்களிடம் விமான நிலைய அதிகாரிகள் விமானம் புறப்பட்ட தயாராகிவிட்டதாக தெரிவித்து, திரும்பி அனுப்பினார்கள். பெரும் விரக்தியுடன் விமான நிலையத்தில் இருந்த தேநீர் கடை ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டே விமான டிக்கெட் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த சோகம் நிகழ்ந்தது. அந்த விமானத்தில் நான் பயணிக்காததை நினைத்து மகிழ்வதா? அல்லது இறந்தவர்களை நினைத்து வருந்துவதா எனத் தெரியவில்லை. அப்போதுதான் விமான நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சி கேட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது." என்றார்.

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ... மேலும் பார்க்க

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்ப... மேலும் பார்க்க

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ... மேலும் பார்க்க

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க