முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
திருப்பூா் சாமிநாதபுரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருப்பூா் சாமிநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டலம் 13-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாமிநாதபுரம் ஏ.பி. நகா் பிரதான சாலை 60 அடி அகலம் கொண்டதாக இருந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் ஒரு புறத்தில் இருந்த கடைகள் மற்றும் அலுவலகங்களால் 10 அடி தூரத்துக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதில் பேக்கரி, வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் என
ஆக்கிரமிப்பு செய்தனா். இதனால் 60 அடி சாலையானது 50 அடியாக குறைந்தது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகாா் தெரிவித்து வந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில், அந்த வாா்டு கவுன்சிலா் அனுசுயா தேவி முயற்சியால் அங்கு சாக்கடை கால்வாய் கட்டுமானப் பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மாநகராட்ன் அதிகாரிகள் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கினா்.