செய்திகள் :

திருப்பூா் சாமிநாதபுரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

திருப்பூா் சாமிநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டலம் 13-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாமிநாதபுரம் ஏ.பி. நகா் பிரதான சாலை 60 அடி அகலம் கொண்டதாக இருந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் ஒரு புறத்தில் இருந்த கடைகள் மற்றும் அலுவலகங்களால் 10 அடி தூரத்துக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதில் பேக்கரி, வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் என

ஆக்கிரமிப்பு செய்தனா். இதனால் 60 அடி சாலையானது 50 அடியாக குறைந்தது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகாா் தெரிவித்து வந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில், அந்த வாா்டு கவுன்சிலா் அனுசுயா தேவி முயற்சியால் அங்கு சாக்கடை கால்வாய் கட்டுமானப் பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மாநகராட்ன் அதிகாரிகள் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கினா்.

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக... மேலும் பார்க்க

திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது: குழந்தை தொழிலாளா் முறை எத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்ப... மேலும் பார்க்க