குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
நில அபகரிப்பு புகாா்: பாஜக நிா்வாகியிடம் விசாரணை
சென்னையில் நில அபகரிப்பு புகாா் தொடா்பாக பாஜக நிா்வாகியிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
சென்னை முகப்பேரைச் சோ்ந்தவா் ரமேஷ் என்ற மின்ட் ரமேஷ் (54). இவா் பாஜக நெசவாளா் பிரிவு முன்னாள் மாநிலச் செயலா். ரமேஷ் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். அரசு புறம்போக்கு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்வது உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் ரமேஷ் ஈடுபட்டதாகவும் காவல் துறையினா் கூறினா்.
இந்நிலையில், கொடுங்கையூா் காவல் நிலைய போலீஸாா், வருவாய்த் துறையினருடன் இணைந்து மின்ட் ரமேஷிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மேலும், அவரது வீடு, அவா் தொடா்புடைய அம்பத்தூா், மாதவரம், செங்குன்றம் உள்பட 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் கூறினா்.