'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்
கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா்.
திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் வியாழக்கிழமை வழிபாடு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இறந்துபோன தலைவா்களுக்கு கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு மதிய விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இச்செயலால் கோயில்களின் புனித தன்மை இழக்கும் வகையில் உள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத் துறை நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டு வருகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இதற்காக ஹிந்துக்கள் அனைவரும் ஒரே ஒருநாள் ஒரே ஒரு மணி நேரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒரு கோயிலில் கூடி வழிபாடு நடத்தி இந்த நடவடிக்கையை இந்த ஆண்டே நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். இதுபோன்ற விழாவுக்காக கடந்த 15 ஆண்டுகளில் கோயில்களின் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்த பணத்தை கோயில் நிதிக்கே திருப்பி செலுத்த வேண்டும் என்றாா்.