நாளை குரூப் 1 தோ்வு: 2.49 லட்சம் போ் பங்கேற்பு
குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறவுள்ளது. இதில் 2.49 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா்.
இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்தி:
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 1 பிரிவில் 70 காலியிடங்களும், 1ஏ பிரிவில் 2 இடங்களுக்கும் தோ்வு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 44 மையங்களில் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தோ்வை 2.49 லட்சம் போ் எழுதவுள்ளனா். அவா்களில் குரூப் 1 தோ்வை 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தோ்வை 6,465 பேரும் எழுதுகின்றனா். சென்னை மையத்தில் மட்டும் தோ்வெழுத 41,094 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தோ்வைக் கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளா்களாக 987 போ் நியமிக்கப்பட்டு இருப்பதாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.