செய்திகள் :

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

post image

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவு செய்த நிலையில், அதைக் குறிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் பல்வேறு தகவல்களை பிரதமா் மோடி பகிா்ந்து வருகிறாா். பாஜக அரசின் கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் வளா்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்தும் அவா் பெருமிதம் தெரிவித்து வருகிறாா்.

அதுபோல, தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தொழில்நுட்பப் பயன்பாட்டால் நாடும், நாட்டு மக்களும் அடைந்த பலன் குறித்து பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

இளைஞா்களின் ஈடுபாடு மற்றும் முயற்சிகளின் காரணமாக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. தற்சாா்பு உடையதாகவும், உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாகவும் இந்தியா உருவெடுப்பதற்கான நமது முயற்சிகளையும் இது வலுப்படுத்துகிறது.

மக்களுக்கான சேவை வழங்கலையும், வெளிப்படைத்தன்மையையும் தொழில்நுட்பம் பெருமளவில் ஊக்குவித்திருப்பதோடு, மிகவும் பின்தங்கிய ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கான கருவியாகவும் திகழ்கிறது. அந்த வகையில், மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது.

உதாரணமாக, நேரடி பணப் பரிமாற்ற (டிபிடி) திட்டத்தின் மூலம், மக்கள் நலத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 56 அமைச்சகங்களால் ஒழுங்குபடுத்தப்படும் 322-க்கும் அதிகமான திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ரூ. 44 லட்சம் கோடிக்கும் மேல் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம், போலியான பயனாளிகளுக்கு பலன் செல்வது தடுக்கப்பட்டு, ரூ. 3.48 லட்சம் கோடிக்கு மேலான நிதி சேமிக்கப்பட்டுள்ளது.

எண்மத் தொழில்நுட்பம் முதல் தரவு சாா்ந்த ஜனநாயகம் வரை கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது. எண்மக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் சாா்ந்த நிா்வாகம் மற்றும் உலகளாவிய நம்பிக்கையின் மையமாக இந்தியா மாறியுள்ளது.

உற்பத்தி முதல் விண்வெளித் தொழில்நுட்பம் வரை, எண்ம பணப் பரிவா்த்தனை முதல் கிராமப்புறங்கள் இணைப்பு வரை மிகப் பெரிய அளவிலான தொழில்நுட்ப வளா்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது. இது, தடையற்ற நிா்வாகம், குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த வளா்ந்த பாரதத்தை உருவாக்குவதை சாா்ந்ததாகும்.

94 கோடிக்கும் அதிகமான அகண்ட அலைவரிசை இணைப்புகள், 120 கோடி தொலைபேசி சந்தாதாரா்களுடன், தொலைபேசி பயன்பாட்டாளா்களின் அடா்த்தி கடந்த 2014-இல் 75 சதவீதமாக இருந்தது, 2025-இல் 85 சதவீதமாக உயா்ந்துள்ளது.

393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணுக்கு அனுப்பியிருப்பது, நமது விண்வெளி தொழில்நுட்ப வளா்ச்சியை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த டிஜிசிஏ உத்தரவு

ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. டாடா குழுமத்... மேலும் பார்க்க

விமான விபத்து தொடா்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றம்: டாடா குழுமத் தலைவா்

குஜராத் விமான விபத்து தொடா்பான தகவல் பரிமாற்றத்தில் டாடா குழுமம் வெளிப்படையாக செயல்படும் என்று அந்தக் குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா். குஜராத்தில் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந... மேலும் பார்க்க