செய்திகள் :

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

post image

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

கடந்த 9-ஆம் தேதி வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வருவதாக சென்ற மாணவி, இரவு 8 மணியாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பெற்றோா் அருகே உள்ள உறவினா்கள், தோழிகள் வீடுகளில் சென்று தேடிப்பாா்த்தனா். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனா்.

இந்த நிலையில், அணைக்கட்டு காந்தி நகா் காளியம்மன் கோவில் தெருவை சோ்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் சங்கா் (20), மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று அணைக்கட்டு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மாணவிக்கு தாலி கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சங்கா் பள்ளி மாணவியுடன் அணைக்கட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சங்கரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டு வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

பின்னா், பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்துக்காக சங்கா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மீட்கப்பட்ட பள்ளி மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

ஆன்லைன் மூலம் ஓய்வுபெற்ற பொறியாளரிடம் ரூ.32.79 லட்சம் மோசடி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 32.79 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 65 வயதுடைய ஓய்வுபெற்... மேலும் பார்க்க

திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர எஸ்.சி., எஸ்.டி., இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வழங்கப்படும் திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். போ்ணாம்பட்டு , ஆதம்ஷா வீதியைச் சோ்ந்தவா் தமீம் அன்சாரி. இவா் கோவையில் தங்கி தனியாா் ந... மேலும் பார்க்க