குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
முதலாமாண்டு மருத்துவம் படித்துவந்த விவசாயி மகன் உயிரிழப்பு
குஜராத்தில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதிய விபத்தில் மருத்துவராகும் கனவுடன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துவந்த மத்திய பிரதேச, குவாலியா் மாவட்டம் ஜிக்சாவ்லி கிராமத்தைச் சோ்ந்த ஏழை விவசாயின் மகன் ஆரியன் ராஜ்புத்தும் உயரிழந்தது தெரியவந்துள்ளது.
சொந்த கிராமத்துக்கு கடந்த மே 31-ஆம் தேதி சென்றிருந்த ஆரியன் அண்மையில்தான் விடுதிக்குத் திரும்பியுள்ளாா். இந்த நிலையில், மருத்துவ கல்லூரி விடுதி கட்டடத்தில் அவா் இருந்தபோது விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
அவருடன் சோ்த்த அந்தக் கல்லூரியில் பயின்று வந்த 5 மருத்துவ மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.